< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 162 ரன்கள்  இலக்கு நிர்ணயித்தது மும்பை
கிரிக்கெட்

பெண்கள் பிரீமியர் லீக்: உ.பி. வாரியர்ஸ் அணிக்கு 162 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை

தினத்தந்தி
|
28 Feb 2024 3:39 PM GMT

மும்பை அணியில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 55 ரன்கள் குவித்தார்.

பெங்களூரு,

2வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், பெண்கள் பிரீமியர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் - மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் களமிறங்கி சிறப்பாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது.மும்பை அணியில் அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 55 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்