< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் அணி வீரர்கள் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு.!

கோப்புப்படம் 

கிரிக்கெட்

பாகிஸ்தான் அணி வீரர்கள் திடீர் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு.!

தினத்தந்தி
|
17 Oct 2023 10:00 PM GMT

பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

பெங்களூரு,

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணி அடுத்து ஆஸ்திரேலியாவை நாளை மறுதினம் பெங்களூருவில் எதிர்கொள்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் பல வீரர்கள் திடீரென வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

அவர்களில் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்து விட்டதாகவும், சிலர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்த அணியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் தற்போது அவரது அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்