< Back
கிரிக்கெட்
இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் கூறியது ஒரே ஒரு விசயம்தான் - வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ராகுல் பேட்டி

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் கூறியது ஒரே ஒரு விசயம்தான் - வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ராகுல் பேட்டி

தினத்தந்தி
|
22 Dec 2023 3:36 AM GMT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

பார்ல்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் சஞ்சு சாம்சனும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய பின் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாங்கள் பெற்ற இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. உலக கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பின் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தற்போதுள்ள இளம் வீரர்கள் நிறைய ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளனர். தற்போது அவர்களே சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. இந்த தொடரில் நான் அணி வீரர்களிடம் கூறியது ஒரே ஒரு விசயம்தான். மகிழ்ச்சியுடன் உங்களது திறமையை களத்தில் வெளிப்படுத்துங்கள். முடிவுகளை பற்றி யோசிக்காமல் உங்களது திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்று கூறினேன்.

அந்த வகையில் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் இளம்வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அணியில் இடம்பெற்ற அனைவருமே தங்களது பங்களிப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். சஞ்சு சாம்சன் ஐ.பி.எல் தொடரில் மிகச் சிறப்பான வீரராக இருந்து வருகிறார்.

ஆனாலும் அவருக்கு சர்வதேச போட்டிகளில் நிறைய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போது மீண்டும் அவர் அணியில் இடம்பெற்று டாப் ஆர்டரில் களமிறங்கி மிகச்சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்