< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும் - இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து

Image Courtesy : PTI

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகப்பெரிய சவாலாக இருக்கும் - இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கருத்து

தினத்தந்தி
|
5 Dec 2023 9:52 AM GMT

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

பெங்களூரு,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ஜனவரி 25-ம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் ஐதராபாத், விசாகப்பட்டினம், ராஜ்கோட்,ராஞ்சி, தரம்சாலா மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் கூறியுள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரண்டன் மெக்கல்லம் இது குறித்து கூறியதாவது,

இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இங்கிலாந்து அணியின் பேட்டிங் அணுகுமுறையை 'பேஸ்பால்' முறை மாற்றியுள்ளது. போட்டியில் வெற்றியோ, தோல்வியோ அதைப் பொருட்படுத்தாமல் எங்கள் அணி 'பேஸ்பால்'அணுகுமுறையைத் தொடரும்.

இந்திய ஆடுகளங்களில் பந்துகள் அதிகம் திரும்பும். அதைப்பற்றி நாங்கள் கவலைப் படப்போவதில்லை. இங்கிலாந்து அணியின் 'பேஸ்பால்' அணுகுமுறையை தொடர்ந்து இந்தத் தொடரிலும் செயல்படுத்துவோம். இந்தியாவில் நடைபெறும் இந்தத் தொடர் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கப் போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த அணிகளுள் ஒன்றாக இந்திய அணி இருக்கிறது. எனவே, அந்த அணிக்கெதிராக எங்களது அணுகுமுறையை சோதித்துப் பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.இந்தத் தொடரில் வெற்றி பெற்றால் நாங்கள் உற்சாகமாக இருப்போம். ஒருவேளை தோல்விகண்டால், அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்