< Back
கிரிக்கெட்
விராட் கோலிக்கு வெள்ளி பேட்டை பரிசாக வழங்கிய இலங்கை வீரர்.!
கிரிக்கெட்

விராட் கோலிக்கு வெள்ளி பேட்டை பரிசாக வழங்கிய இலங்கை வீரர்.!

தினத்தந்தி
|
9 Sep 2023 7:15 PM GMT

விராட் கோலிக்கு இலங்கை வீரர் வெள்ளி பேட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

கொழும்பு,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் விதமாக கொழும்புவில் இந்திய அணி வீரர்கள் பில்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

இந்நிலையில், இலங்கை வலைப்பயிற்சி பந்துவீச்சாளர் சந்திரமோகன் கிரிஷாநாத், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு வெள்ளியிலான பேட் ஒன்றை பரிசாக அளித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் விராட் கோலியின் தீவிர ரசிகன். அவரது ஒவ்வொரு சதத்தின் விவரங்களையும் இந்த வெள்ளி பேட்டில் பொறித்துள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்