< Back
கிரிக்கெட்
ஐபிஎல் இறுதிப்போட்டி : ஜெய்ஸ்வால், சாம்சன் ஆட்டமிழப்பு - சிறப்பாக தொடங்கிய குஜராத் அணி

Image Courtesy : Twitter @IPL 

கிரிக்கெட்

ஐபிஎல் இறுதிப்போட்டி : ஜெய்ஸ்வால், சாம்சன் ஆட்டமிழப்பு - சிறப்பாக தொடங்கிய குஜராத் அணி

தினத்தந்தி
|
29 May 2022 3:22 PM GMT

16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

அகமதாபாத்,

கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. பிரம்மாண்ட இறுதி போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா கலை நிகழ்ச்சிகள் மிக கோலாகலமாக நிறைவு பெற்றதை அடுத்து போட்டி தொடங்கியது

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து பட்லர் உடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன் குஜராத் கேப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிசோர்-யிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் படிக்கல் களமிறங்கினார்.

தற்போது வரை ராஜஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்