< Back
கிரிக்கெட்
நிதிஷ் ரெட்டி அரைசதம்... பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்
கிரிக்கெட்

நிதிஷ் ரெட்டி அரைசதம்... பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

தினத்தந்தி
|
9 April 2024 3:49 PM GMT

ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

முல்லாப்பூர்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ரன்களும், அபிஷேக் சர்மா 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி, அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்துல் சமத் 25 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்