< Back
கிரிக்கெட்
லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்
கிரிக்கெட்

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர்: மீண்டும் களமிறங்கும் ஜாம்பவான்கள்

தினத்தந்தி
|
2 Sep 2022 3:40 PM GMT

லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது.

மும்பை,

ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் லெஜன்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர், செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறுகிறது.

மொத்தம் 4 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், 6 நகரங்களில் 16 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் இரண்டு அணிகளுக்கான கேப்டன்கள் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஷேவாக்கும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு கவுதம் காம்பீரும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்