< Back
கிரிக்கெட்
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்குவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டும் - வாசிம் ஜாபர்

image courtesy; AFP

கிரிக்கெட்

இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்குவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டும் - வாசிம் ஜாபர்

தினத்தந்தி
|
10 Dec 2023 9:26 AM GMT

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

2008ஆம் ஆண்டு சாதாரண டி20 தொடராக துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் ரசிகர்களை கவர்வதற்காகவும் புதுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.

அந்த விதிமுறைப்படி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரரை இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மற்றொரு வீரருக்கு பதிலாக நடுவரின் அனுமதியுடன் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி உள்ளே வரும் வீரர் மற்ற வீரர்களைப் போலவே முழுமையாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

இந்நிலையில் இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக வாசிம் ஜாபர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு;- "இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்குவது குறித்து ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதுகிறேன். அது ஆல் ரவுண்டர்கள் பந்து வீசுவதற்கான ஊக்கத்தை கொடுக்கவில்லை. ஏற்கனவே ஆல் ரவுண்டர்களுக்கான பஞ்சமும் பேட்ஸ்மேன்கள் பந்து வீசாமல் இருக்கும் பிரச்சனையும் இந்திய கிரிக்கெட்டில் நிலவுகிறது. இது பற்றி உங்களுடைய கருத்துகள் என்ன?" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்