< Back
கிரிக்கெட்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டி20 போட்டி: மழையால் 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதம்

image courtesy: twitter/@BCCIWomen

கிரிக்கெட்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா 2-வது டி20 போட்டி: மழையால் 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதம்

தினத்தந்தி
|
7 July 2024 4:28 PM GMT

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 177 ரன்கள் அடித்தது.

சென்னை,

இந்தியா-தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் மோதும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இந்திய அணிக்கு 178 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 52 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இந்நிலையில் தற்சமயம் அங்கு மழை பெய்வதன் காரணமாக 2-வது இன்னிங்ஸ் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்