< Back
கிரிக்கெட்
இது மட்டும் நடந்திருந்தால் ..! டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்திருப்பேன் : சேவாக் கருத்து

Image Courtesy : PTI 

கிரிக்கெட்

இது மட்டும் நடந்திருந்தால் ..! டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்திருப்பேன் : சேவாக் கருத்து

தினத்தந்தி
|
25 May 2022 11:03 AM GMT

இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான சேவாக், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர தொடக்க வீரரான வீரேந்திர சேவாக், டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார். எதிர்கொள்ளும் முதல் பந்திலேயே பவுண்டரி விட்டு அதிரடியாக விளையாடி இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார் .எந்த போட்டியாக இருந்தாலும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டு அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தியுள்ளார் .

2001 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான சேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 8586 ரன்களை குவித்துள்ளார் .இந்நிலையில் அந்த ஒருவருடம் என்னை விளையாட வைத்திருந்தால் நான் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்திருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சேவாக் கூறியதாவது ;

திடீரென்று, நான் டெஸ்ட் அணியில் இல்லை என்பதை உணர்ந்தேன்; அது மிகவும் வேதனையை தந்தது .. அந்த காலகட்டத்தில் நான் கைவிடப்படாமல், விளையாடி இருந்தால் 10 ஆயிரம் டெஸ்ட் ரன்களுடன் முடித்திருப்பேன்" என்று அவர் கூறியுள்ளார் .

2007ம் ஆண்டு அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதன்பிறகு 2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது .

Related Tags :
மேலும் செய்திகள்