< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை தொடரில் இவர்தான் அதிக ரன்கள் அடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை தொடரில் இவர்தான் அதிக ரன்கள் அடிப்பார் - ஸ்டீவ் ஸ்மித்

தினத்தந்தி
|
4 Jun 2024 9:35 AM GMT

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

மெல்போர்ன்,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நாளை அயர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் விராட் கோலி அதிக ரன்கள் அடிப்பார் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த தொடரில் விராட் கோலி தான் அதிக ரன் எடுப்பவராக இருப்பார். அவர் ஒரு பயங்கரமான ஐ.பி.எல்-லில் இருந்து வருகிறார், மேலும் அவர் சில சிறந்த பார்மைக் கொண்டு வருகிறார். மேலும் அவர் முன்னணி ரன் எடுப்பவராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு டாப் ஆர்டர் பேட்டருடன் செல்கிறேன். விராட் கோலி அல்லது ஜோஸ் பட்லர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்