< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி; இலங்கை அதிரடி பேட்டிங்... வங்காளதேசத்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

image courtesy; twitter/@ICC

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி; இலங்கை அதிரடி பேட்டிங்... வங்காளதேசத்துக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

தினத்தந்தி
|
4 March 2024 1:59 PM GMT

இலங்கை அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்ரம 61 ரன்கள் குவித்தார்.

சிலெட்,

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் மற்றும் இரண்டு டெஸ்டில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது.

அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சிலெட் நகரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 3 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்ரம 61, குசல் மெண்டிச் 59 மற்றும் அசலன்கா 44 ரன்கள் குவித்து அசத்தினர். வங்காளதேச அணி தரப்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹோசைன் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி வங்காளதேசம் பேட்டிங் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்