< Back
கிரிக்கெட்
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் லீக்: சென்னை அணியுடன் மீண்டும் இணைந்த பாப் டூ பிளசிஸ்

Image Courtesy: PTI 

கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் லீக்: சென்னை அணியுடன் மீண்டும் இணைந்த பாப் டூ பிளசிஸ்

தினத்தந்தி
|
11 Aug 2022 5:17 PM GMT

ஜோகனஸ்பர்க் அணியில் நட்சத்திர வீரர் பாப் டூ பிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

சென்னை:

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

தற்போது ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என பெயர் வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் நட்சத்திர வீரர் பாப் டூ பிளசிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

பல ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாப் டூ பிளசிஸ் சிறப்பான பங்களிப்பை வழங்கி உள்ளதால் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்