< Back
கிரிக்கெட்
எலிமினேட்டர் ஆட்டம்; ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் நாளை மோதல்

Image Courtesy: @RCBTweets

கிரிக்கெட்

எலிமினேட்டர் ஆட்டம்; ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் நாளை மோதல்

தினத்தந்தி
|
21 May 2024 4:15 PM GMT

ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் அகமதாபாத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். தோல்வி அடையும் அணி 2வது தகுதிசுற்று ஆட்டத்திற்கு செல்லும்.

இந்நிலையில் இந்த தொடரில் அகமதாபாத்தில் நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2வது தகுதிசுற்று ஆட்டத்திற்கு முன்னேறும், தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

இதன் காரணமாக நாளை நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்