< Back
கிரிக்கெட்
இப்படி கண்டிப்பா பண்ணனும்..! இல்லன்னா ஐபிஎல் விளையாட   வராதீங்க - டேவிட் வார்னர் மீது சேவாக் கடும் தாக்கு
கிரிக்கெட்

இப்படி கண்டிப்பா பண்ணனும்..! இல்லன்னா ஐபிஎல் விளையாட வராதீங்க - டேவிட் வார்னர் மீது சேவாக் கடும் தாக்கு

தினத்தந்தி
|
9 April 2023 9:58 AM GMT

வார்னரின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார்.

கவுகாத்தி,

ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி டெல்லியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து 199 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் தரப்பில் பட்லர் 79 ரன்னும், ஜெய்ஸ்வால் 60 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பிரித்வி ஷா 0 ரன், அடுத்து வந்த மணிஷ் பாண்டே 0 ரன் இருவரையும் முதல் ஓவரிலேயே பவுல்ட் வீழ்த்தினார்.

இதையடுத்து களம் இறங்கிய ரீலி ரோசவ் 14 ரன், லலித் யாதவ் 38 ரன், அக்சர் படேல் 2 ரன், ரோவ்மன் பவல் 2 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். . இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது..அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் பொறுமையாக விளையாடி 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் .

இதையடுத்து ராஜஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி 3 ஆட்டங்களில் ஆடி 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வார்னரின் இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ,

" நாம் ஆங்கிலத்தில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது அப்போதுதான் டேவிட் வாரணருக்கு புரியும். நீங்கள் இதைக் கவனித்துக் கொண்டிருந்தால் தயவுசெய்து நன்றாக விளையாடுங்கள் . நீங்கள் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும் ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் அவர் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார்.. இது முடியவில்லை என்றால் ஐபிஎல்லில் வந்து விளையாட வேண்டாம்" என கடுமையாக தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசிய சேவாக் "

டேவிட் வார்னர் 30 ரன்களில் ஆட்டம் இழப்பது டெல்லி அணிக்கு நல்ல விஷயம் தான் . அவர் 50 அல்லது 60 ரன்கள் எடுக்கும் போது பின் வரிசையில் வரும் அதிரடி வீரர்கள் ரோமன் பாவல் மற்றும் அபிஷேக் போரல் போன்ற வீரர்களுக்கு ஆடுவதற்கு போதுமான வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை. அவர்களைப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அதிக பந்துகளில் ஆட வேண்டும் என்று எனது பேட்டியை முடித்தார்" சேவாக்.

மேலும் செய்திகள்