< Back
கிரிக்கெட்
டோனி மேலும் 2 ஆண்டு விளையாடுவார் - மைக் ஹஸ்சி நம்பிக்கை
கிரிக்கெட்

டோனி மேலும் 2 ஆண்டு விளையாடுவார் - மைக் ஹஸ்சி நம்பிக்கை

தினத்தந்தி
|
16 May 2024 8:54 PM GMT

டோனி தனித்திறமை மிக்க வீரர் என்று சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்சி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டோனி தொடர்ந்து விளையாடுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தற்போதும் நன்றாக பேட்டிங் செய்து வருகிறார். பயிற்சி முகாமுக்கு முன்னதாகவே வந்து நிறைய பந்துகளை எதிர்கொண்டு தயாராகிறார். கடந்த ஐ.பி.எல். தொடருக்கு பிறகு அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து இருப்பதால் அவரது பணிச் சுமையை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

அவர் நடப்பு தொடரில் தொடக்கத்தில் இருந்து உடல் தகுதியை சரியாக கவனித்து விளையாடி வருகிறார். காயத்தில் இருந்து மீண்டு வந்து இருப்பதால் தான் அவர் இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்ய வருகிறார். முதல் பந்தில் இருந்தே அடித்து விளையாட டோனியை போன்று வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன்.

டோனி தனித்திறமை மிக்க வீரர். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்று நம்புகிறேன். ஆனால் நாம் அதனை காத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இது குறித்து அவர் உடனடியாக முடிவு எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்