< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு கடினமான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு கடினமான இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
8 Jun 2024 7:00 PM GMT

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 201 ரன்கள் குவித்துள்ளது.

பிரிட்ஜ்டவுன்,

டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், பார்படாசின் பிரிட்ஜ்டவுன் நகரில் இன்று நடைபெற்றுவரும் 17வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவுக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வார்னர் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்த நிலையில் அவுட் ஆனார். ஹெட் 18 பந்துகளில் 34 ரன்கள் குவித்த நிலையில் ஆர்ச்சர் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்துவந்த கேப்டன் மிச்சேல் மார்ஷ் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் டேவிட் 11 ரன்களில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டாய்னஸ் 17 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில் ஆஸ்திரேலியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அந்த அணியின் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 202 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.

மேலும் செய்திகள்