< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை வரலாற்றில் பிறந்த நாளில் சதம் அடித்த 3-வது வீரர்!

image courtesy; twitter/ @BCCI

கிரிக்கெட்

உலகக்கோப்பை வரலாற்றில் பிறந்த நாளில் சதம் அடித்த 3-வது வீரர்!

தினத்தந்தி
|
6 Nov 2023 5:10 AM GMT

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

இந்திய அணி தரப்பில் விராட் கோலி சதமும் (101 ரன்), ஸ்ரேயாஸ் அரைசதமும் (77 ரன்) அடித்து அசத்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது.

இதில் இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி 27.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்திய வீரர் விராட் கோலிக்கு நேற்று 35-வது பிறந்த நாள். இந்த ஆட்டத்தில் சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பிறந்த நாளில் சதம் அடித்த 3-வது வீரராக விராட் கோலி ஆனார். இதற்கு முன்னர் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் தங்களது பிறந்த நாளில் உலகக்கோப்பையில் சதம் அடித்துள்ளனர்.

மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பிறந்த நாள் அன்று சதம் அடித்த 7-வது வீரர் கோலி ஆவார். ஏற்கனவே இந்தியாவின் வினோத் காம்ப்ளி, தெண்டுல்கர், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், டாம் லாதம், ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் மற்றும் இலங்கையின் ஜெயசூர்யா ஆகியோரும் தங்களது பிறந்த நாளில் சதத்தை பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்