< Back
ஆன்மிகம்
திருவாரூர்
ஆன்மிகம்
மகா காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
|12 May 2023 6:45 PM GMT
மகா காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறில் மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.