< Back
ஆன்மிகம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்
எட்டுக்குடி சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம்
|26 Jun 2022 2:32 PM GMT
எட்டுக்குடி சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
வேளாங்கண்ணி:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடியில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆனி மாத கார்த்திகையையொட்டி சுப்பிரமணியசாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், திரவியப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் வாய்மேட்டில் உள்ள பழனியாண்டவர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், இளநீர், சந்தனம், திருநீறு, திரவியம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.