< Back
ஆன்மிகம்
நாகப்பட்டினம்
ஆன்மிகம்
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
|23 Nov 2022 6:45 PM GMT
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
தலைஞாயிறு அருகே உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதியில் பக்த வைராக்கிய ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். இங்கு கார்த்திகை மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தன காப்பு செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.