< Back
ஆன்மிகம்
ஆடிச்சுற்று.. அம்பாளின் கால் வலியை ஏற்க பக்தர்கள் செய்யும் வழிபாடு
ஆன்மிகம்

ஆடிச்சுற்று.. அம்பாளின் கால் வலியை ஏற்க பக்தர்கள் செய்யும் வழிபாடு

தினத்தந்தி
|
18 July 2024 6:46 AM GMT

கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அம்பாள் அகற்றுவதாக ஐதீகம்.

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று. சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயண சுவாமி, கோமதி அம்மன் முதலிய சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.

சங்கரன்கோவில் கோமதி அம்மன் கோவிலில் ஆடித்தபசு கொடி ஏறிய பின் ஆடிச்சுற்று எனும் பெயரில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி வந்து வழிபடுகிறார்கள். ஆடிச்சுற்று சுற்றுவதன்மூலம், ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாங்கள் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அம்பாளும் இப்படி தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுவதாக ஐதீகம்.

பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள். மாணவ-மாணவிகள், வாலிபர்கள், கன்னிப்பெண்கள், வயதான ஆண்-பெண் என அனைத்து வயதினரும் ஆடிச்சுற்று சுற்றுகிறார்கள்.

ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடந்த பிறகே பக்தர்கள் ஆடிச்சுற்று செல்ல தொடங்குவார்கள். ஆடித்தபசு திருவிழாவிற்குள் ஆடிச்சுற்று முடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

மேலும் செய்திகள்