< Back
ஆன்மிகம்
தென்காசி
ஆன்மிகம்
தேரோட்டம்
|6 Sep 2022 1:29 PM GMT
கடையம் அருகே அன்பு சமதர்ம பதியில் தேரோட்டம்
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள சம்பன்குளம் அன்பு சமதர்ம பதி அய்யா நாராயணசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் ஆவணி திருவிழா தொடங்கியது.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்னதானம் நடைபெற்று வந்த நிலையில் 10-ந் திருநாளையொட்டி அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் பவனி வந்தார். 11-ம் திருநாளையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்தை பேணி காக்கும் பொருட்டு தர்மபுரம் மடம் ஊராட்சி மன்ற தலைவர் ரூஹான் ஜன்னத் சதாம், துணைத்தலைவர் அனுசியா சைலப்பன் ஆகியோர் தேர்வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.