< Back
ஆன்மிகம்
கோவையில் இருந்து ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது- தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கி.மீ. பயணம்
ஆன்மிகம்

கோவையில் இருந்து ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியது- தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கி.மீ. பயணம்

தினத்தந்தி
|
6 Jan 2024 11:14 AM GMT

பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

கோவை:

கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹா சிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையில் நேற்று தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரத யாத்திரையை தொடங்கி வைத்தார்.

ஆதியோகி திருமேனியுடன் கூடிய 4 ரதங்கள் தமிழகம் முழுவதும் வலம் வர உள்ளன. இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் கி.மீ தூரம் வரை பயணிக்க உள்ளன. ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோகா மையத்தை வந்தடையும்.

ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்களுக்கு தங்கள் ஊர்களிலேயே தரிசிப்பதற்கான வாய்ப்பாக இந்த ரத யாத்திரை அமைய உள்ளது.

மேலும் செய்திகள்