< Back
ஆன்மிகம்
ஆண்டாள் ேகாவிலில் ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
விருதுநகர்
ஆன்மிகம்

ஆண்டாள் ேகாவிலில் ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
16 July 2022 7:18 PM GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ேகாவிலில் ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுபரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வருகிற 24-ந் தேதி கொடிேயற்றத்துடன் விழா ெதாடங்குகிறது. இதையொட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 28-ந் தேதி கருட சேவை நிகழ்ச்சி, 30-ந் ேததி ஆண்டாள் சயன சேவை, வருகிற 1-ந் தேதி ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி தற்போது தேர் சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாத காலமாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல ஆடிப்பூர திருவிழாவிற்கு பந்தல் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்