< Back
உலக செய்திகள்
சீனா, பாகிஸ்தான் கடற்படைகள் விரைவில் கூட்டு போர் பயிற்சி
உலக செய்திகள்

சீனா, பாகிஸ்தான் கடற்படைகள் விரைவில் கூட்டு போர் பயிற்சி

தினத்தந்தி
|
10 July 2022 5:59 PM GMT

ஆசியாவில் வலுவான நாடாக திகழ வேண்டும் என்று சீனா ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகிறது.

பீஜிங்,

ஆசியாவில் வலுவான நாடாக திகழ வேண்டும் என்று சீனா ஆதிக்க மனப்பாங்குடன் செயல்படுகிறது. இந்தியாவுக்கு எதிரான போக்கை பாகிஸ்தான் தொடர்ந்து கடைபிடிக்கிறது. இந்தியாவினுள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.

இதற்கிடையே, சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது.

இவ்விரு நாடுகளின் கடற்படைகள் கிழக்கு சீனாவில் ஷாங்காய் அருகே கூட்டு போர் பயிற்சியை அடுத்த சில நாட்களில் நடத்த உள்ளன. இதை சீன ராணுவத்தின் கடற்படை செய்தித்தொடர்பாளர் லியு வென்ஷெங் நேற்று அறிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "இந்த பயிற்சி, கடற்படை பாதுகாப்பு சவால்களை கூட்டாக சந்திப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இது உதவும். அதே நேரத்தில், அனைத்து வானிலை மூலோபாய கூட்டை மேம்படுத்தவும் செய்யும்" என தெரிவித்தார்.

மேலும், இந்த கூட்டு போர் பயிற்சி வருடாந்திர திட்டத்தின்படி நடக்க உள்ளதாகவும், மூன்றாம் தரப்பினரை குறிவைத்து நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்