< Back
உலக செய்திகள்
ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததற்கு ஐ.நா. இரங்கல்

கோப்புப்படம் 

உலக செய்திகள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததற்கு ஐ.நா. இரங்கல்

Muthu Pandian K
|
9 July 2022 1:45 AM GMT

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்து உள்ளது.

டோக்கியோ,

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் ஷின்ஜோ அபே (வயது 67). கடந்த 2006-07, 2012-20 ஆகிய காலகட்டங்களில் ஜப்பானின் பிரதமர் பதவி வகித்தவர்.

இவர், நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நாரா நகர ரெயில் நிலையம் முன்பு நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஷின்ஜோ அபே கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசத்தொடங்கிய சில நிமிடங்களில், அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த நபர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவர் கழுத்தில் குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக நாரா மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் ஷின்ஜோ அபேயை காப்பாற்ற முடியவில்லை. உள்ளூர் நேரப்படி மாலை 5.03 மணிக்கு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.

ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி, தைவான் அதிபர் சாய் இங் வென் என என உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்டதற்கு ஐ.நா. இரங்கல் தெரிவித்து உள்ளது. ஒரு அறிக்கையில் ஐ.நா. செய்தித் தொடர்பாளர், பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், அபேயின் "பயங்கரமான கொலையால் வருத்தமடைந்ததாக" கூறினார்.

"அவர் பலதரப்புவாதத்தின் உறுதியான பாதுகாவலராகவும், மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவாளராகவும் நினைவுகூரப்படுவார்" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்