< Back
உலக செய்திகள்
துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய டிரம்ப்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய டிரம்ப்

தினத்தந்தி
|
16 July 2024 2:23 PM GMT

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக டிரம்ப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் பென்சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் இந்திய நேரப்படி நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் டிரம்பின் வலது காதில் ஏற்பட்ட காயத்துடன் அவர் உயிர் தப்பினார். ஆனால் அவரது ஆதரவாளர்களில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

உடனே டிரம்பை சுட்டவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அவர் பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க் நகரை சேர்ந்த தாமஸ் மேத்யூ என்ற 20 வயது வாலிபர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மில்வாக்கி பகுதியில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று டிரம்ப் கலந்து கொண்டார். 78 வயதான டிரம்ப், துப்பாக்கி சூடு சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இது என்பதால், நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவரது காதில் துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட காயத்திற்காக பேண்டேஜ் போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் டிரம்பு உரையாற்றவில்லை. அங்கு திரண்டிருந்த தனது ஆதரவாளர்களை நோக்கி கையசைத்தவாறு அவர்களது வரவேற்பை டிரம்ப் ஏற்றுக்கொண்டார்.

மேலும் செய்திகள்