< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் உறவினருக்கு வசதி செய்து தர அதிகாரியிடம் பேசும் உரையாடல் கசிவு
உலக செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் உறவினருக்கு வசதி செய்து தர அதிகாரியிடம் பேசும் உரையாடல் கசிவு

தினத்தந்தி
|
25 Sep 2022 9:27 AM GMT

பாகிஸ்தான் பிரதமர் தனது உறவினருக்கு வசதி ஏற்படுத்தி தரும்படி அரசு அதிகாரியிடம் கூறும் உரையாடல் கசிந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.



லாகூர்,


முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியை சேர்ந்த பவத் சவுத்ரி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள 2 நிமிடம் ஓட கூடிய ஆடியோ பதிவில், பிரதமர் நாட்டை விட தனது குடும்பத்தின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்படுகிறார் என்பது தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அதுபற்றி அவர் வெளியிட்ட அந்த வீடியோவில், ஷெபாஸ் ஷெரீப் பேசுவது போன்ற குரல் கேட்கிறது. அதில் ஷெரீப், இந்தியாவில் இருந்து மின் உலைக்கான இயந்திர இறக்குமதிக்கு தனது மருமகனான ரஹீல் என்பவருக்கு வசதி செய்து தரும்படி மரியம் நவாஸ் ஷெரீப் என்னிடம் கேட்டுள்ளார் என்று ஷெபாஸ் ஷெரீப், உயரதிகாரியிடம் கூறுகிறார்.

அதற்கு அந்த அதிகாரி, நாம் இப்படி செய்தோம் என்றால், இந்த விவகாரம் அமைச்சரவைக்கு செல்லும்போது, கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என கூறுவது கேட்கிறது என்று தி டான் பத்திரிகை தெரிவித்து உள்ளது.

அதற்கு பிரதமர், அந்த மருமகன் மரியம் நவாசுக்கு ரொம்ப அன்பானவர். இந்த விவரம் பற்றி மரியமிடம் விரிவாக எடுத்து கூறுங்கள். அதன்பின்னர், மரியமிடன் நான் பேசுகிறேன் என்று ஷெரீப் கூறுகிறார்.

அதற்கு பதிலாக, இது அரசியல் சிக்கலை உருவாக்க கூடும் என்று அந்த நபர் எச்சரிக்கை ஏற்படுத்தும் வகையில் கூறுகிறார். இந்த ஆடியோ கசிவானது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்