< Back
உலக செய்திகள்
துருக்கியில் கத்திக்குத்து தாக்குதல் - 5 பேர் காயம்
உலக செய்திகள்

துருக்கியில் கத்திக்குத்து தாக்குதல் - 5 பேர் காயம்

தினத்தந்தி
|
13 Aug 2024 8:19 AM GMT

துருக்கியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

அங்காரா,

துருக்கி நாட்டின் எஸ்கிசிர் மாகாணம் எஸ்கிசிர் நகரில் உள்ள தேநீர் கடையில் இன்று கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இன்று அந்த கடையில் வாடிக்கையாளர்கள் தேநீர் குடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ஹெல்மெட், துப்பாக்கி துளைக்காத கவச உடை அணிந்து கத்தியுடன் வந்த இளைஞர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், தாக்குதல் நடத்திய அர்டா என்ற இளைஞரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், தாக்குதல் நடத்திய இளைஞரிடமிருந்து கோடாரியும் கைது செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்