< Back
உலக செய்திகள்
இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை; அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு
உலக செய்திகள்

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை; அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவு

தினத்தந்தி
|
30 Sep 2023 8:33 PM GMT

இலங்கையில் தமிழ் நீதிபதி பதவி விலகியது குறித்து விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைதீவு மாவட்ட நீதிபதியாக இருந்தவர் சரவணன் ராஜா. தமிழரான இவர் சர்ச்சைக்குரிய குருந்தூர் மலை தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. தீர்ப்பை மாற்றி அறிவிக்கவும் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

இதன்காரணமாக சரவணன் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டைவிட்டு வெளியேறினார். தற்போது அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். சரவணன் ராஜா தரப்பில் இருந்து எந்தவித புகாரும் அளிக்கப்படாதபோதும், அவரது பதவி விலகலுக்கான சூழ்நிலையை ஆராயுமாறு ரணில் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்