< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 6.1 ஆக பதிவு
|2 April 2024 1:50 AM GMT
ஜப்பானில் ரிக்டரில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
டோக்கியோ,
ஜப்பானின் வடக்கே இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் நேற்று நள்ளிரவு 12.59 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது.
இதனை ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் அந்த மாகாணங்களின் வடகடலோர பகுதியில் மையம் கொண்டிருந்தது.
எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் அந்த பகுதியில் விடப்படவில்லை. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.