< Back
உலக செய்திகள்
போதைப்பொருள் கடத்தல் பிரபல மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை ...!
உலக செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் பிரபல மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை ...!

தினத்தந்தி
|
16 Jun 2022 4:09 PM IST

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிரபல ரஷியா மாடல் அழகிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மாஸ்கோ

ரஷியா அழகி ஒருவர் போதைப்பொருள் வந்த்திருந்ததாக கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

மாடல் ஏஜென்சி உரிமையாளரான 34 வயதான கிறிஸ்டினா துகினா.இவர் 2019 இல் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தை வென்று உள்ளார். 2020 இல் ரஷியா அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார்.

போதைப்பொருள் கடத்தியதாக துகினா ரஷியா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரிடம் அரை கிலோ மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் மீது தற்போது சட்டவிரோதமாக போதைப்பொருளை கடத்துதல், விற்பனை செய்ததாக வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்