< Back
உலக செய்திகள்
ராணி எலிசபெத் மறைவு: பக்கிங்காம் அரண்மனை முன் திரண்ட மக்கள்...!
உலக செய்திகள்

ராணி எலிசபெத் மறைவு: பக்கிங்காம் அரண்மனை முன் திரண்ட மக்கள்...!

தினத்தந்தி
|
9 Sep 2022 5:22 AM GMT

உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த 2-வது நபர் என்ற பெருமைக்குறியவர் ராணி 2-ம் எலிசபெத் ஆவார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மகாராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் மகாராணி எலிசபெத்துக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மகாராணி எலிசபெத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96 ஆகும். இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராணி எலிசபெத் மறைவு செய்தி அறிந்ததும் இங்கிலாந்து மக்களும், உலக தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ராணியின் உடல் பக்கிங்காம் அரண்மனைக்கு கொண்டுவரப்படுகிறது. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொட்டும் மழையிலும் ஏராளமான மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன் திரண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்