< Back
உலக செய்திகள்
இஸ்ரேலில் ராணுவ துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

இஸ்ரேலில் ராணுவ துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பலி

தினத்தந்தி
|
11 April 2023 9:39 PM GMT

இஸ்ரேலில் ராணுவ துப்பாக்கி சூட்டில் பாலஸ்தீன சிறுவன் பரிதாபமாக பலியானான்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜெருசலேம் பகுதியில் உள்ள மசூதிக்குள் புகுந்து ராணுவம் தாக்குதல் நடத்தியதையடுத்து இந்த மோதல் தீவிரம் அடைந்தது.

இந்தநிலையில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் பயங்கரவாதி ஒருவர் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவரை கைது செய்வதற்காக அங்கு ராணுவத்தினர் சென்றனர். அப்போது பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. நிலைமையை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அங்கிருந்த 15 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் அங்கு மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகுவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்