< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உக்ரைனுக்கு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள்: அமெரிக்கா அறிவிப்பு
|20 Aug 2022 11:31 AM GMT
உக்ரைனுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பெண்டகன்,
உக்ரைனுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ராணுவ உதவியில் ஹைமார்ஸ் ஏவுகணைகள், பீரங்கி மற்றும் கண்ணிவெடி அகற்றும் உபகரணங்கள், டொவ் ஏவுகணைகள் அடங்கும்.
இந்த தொகுப்பில் கணிசமான அளவு கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 2021 முதல் இதுவரை, அமெரிக்கா உக்ரைனுக்கு 19 இராணுவ தொகுப்புகள் அடங்கிய உதவிகளை வழங்கியுள்ளது.