< Back
உலக செய்திகள்
வங்காளதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்
உலக செய்திகள்

வங்காளதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்

தினத்தந்தி
|
4 July 2024 3:41 AM GMT

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

டாக்கா,

வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி நேற்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். அப்போது இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

மேலும் செய்திகள்