< Back
உலக செய்திகள்
நேபாளத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை
உலக செய்திகள்

நேபாளத்தில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

தினத்தந்தி
|
25 Dec 2022 9:47 AM GMT

தெற்கு நேபாளத்தில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காத்மாண்டு,

தெற்கு நேபாளத்தில் இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத 5 நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். கொல்லப்பட்ட நபர் பீகார் மாநிலம் மோதிஹாரி சௌதாடனோவில் வசிக்கும் சிவ பூஜன் யாதவ் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் மகாகதிமை நகராட்சியில் அவர் சுடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து சிறிது நேரத்தில் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போலீசார் சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்