< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை
உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை

தினத்தந்தி
|
25 Feb 2023 9:52 PM GMT

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு 51 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கரோலினா,

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜீல் படேல் என்பவர் இந்தியாவில் செயல்பட்டு வரும் கால்சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்களை ஏமாற்றி பல கோடி ரூபாயை சுருட்டியதாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த தெற்கு கரோலினா கோர்ட்டு ஜீல் படேலுக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.

மேலும் செய்திகள்