< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
"30 வயதிற்குள் 3 குழந்தைகள் பெற்றால்..." அரசின் அதிரடி அறிவிப்பு...! படு குஷியில் இளைஞர்கள்...
|27 March 2023 5:46 PM GMT
மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
சியோல்,
தென்கொரியாவைப் பொறுத்தமட்டில் 18 முதல் 28 வயதிற்குட்பட்ட ஆண்கள் கட்டாயம் 18 அல்லது 21 மாதங்கள் ராணுவ சேவை ஆற்ற வேண்டும்.
ஆனால், புதிய விதிகளின்படி சில ஆண்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கபட்டுள்ளது. அதாவது 30 வயதிற்குள்ளாகவே 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையானால் அவர்களுக்கு இந்த கட்டாய ராணுவ சேவை விதி அவசியமில்லை.
தென்கொரிய மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.