< Back
உலக செய்திகள்
பிரேசிலில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு; 6 பேர் பலி
உலக செய்திகள்

பிரேசிலில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையே துப்பாக்கி சூடு; 6 பேர் பலி

தினத்தந்தி
|
12 July 2022 11:34 PM GMT

பிரேசில் நாட்டில் போலீசாருக்கும், கும்பலுக்கும் இடையேயான துப்பாக்கி சூடு மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.



ரியோ டி ஜெனீரோ,



பிரேசில் நாட்டின் மிக பெரிய நகரங்களில் ஒன்றான ரியோ டி ஜெனீரோவின் வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மங்கினோஸ் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு குழுவினர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் படையுடன் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசாருக்கும் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர்.

இந்த கடுமையான மோதலில் 6 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதனால், அந்த பகுதியில் ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. ரியோ டி ஜெனீரோ நகர போலீசாரின் தலைமையகம் உள்ள பகுதிக்கு அருகே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்