< Back
உலக செய்திகள்
ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜுடன் வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர்

உலக செய்திகள்

ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்பு

தினத்தந்தி
|
19 Sep 2022 5:05 AM GMT

ஐ.நா. பொதுச் சபையின் உயர்மட்ட 77வது அமர்வில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நியூயார்க் வந்தடைந்தார்.

நியூயார்க்:

ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 10 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு நாளை (செப்டம்பர் 20) தொடங்கும் ஐ.நா பொதுச்சபையின் ஒருவாரகால கூட்டத்தில் பங்கேற்கிறது. வரும் 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில், 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் வேளையில், ஐ.நா-வுக்கும் - இந்தியாவுக்கும் இடையேயான நல்லுறவு குறித்து மந்திரி ஜெயிசங்கர் உரையாற்றுகிறார்.

ஜி-20 மற்றும் ஐ நா பாதுகாப்பு உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரியுடனும் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் கலந்துரையாடுகிறார்.

25-ஆம் தேதியிலிருந்து 28-ஆம் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்டன் மற்றும் உயரதிகாரிகளுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அமைச்சர் பேச்சுக்கள் நடத்துகிறார்.

பிரிக்ஸ் மற்றும் க்வாட் அமைப்பு நாடுகளின் கூட்டங்களிலும் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். சிறிய நாடுகளும், ஐநா பாதுகாப்புக் குழுவில் உறுப்பினர்களாக சேருவதற்கு உரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நடைபெறும் கூட்டத்திலும் அவர் பங்கேற்கிறார்.

மேலும் செய்திகள்