< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு

தினத்தந்தி
|
29 Aug 2024 12:22 PM GMT

ஆப்கானிஸ்தானில் காலை 11:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

காபுல்,

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11:26 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கடியில் 255 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த 5ம் தேதி ஆப்கானிஸ்தானில் ரிக்டரில் 4.3 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 125 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்