< Back
உலக செய்திகள்
இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்வு; 151 பேர் மாயம்
உலக செய்திகள்

இந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 268 ஆக உயர்வு; 151 பேர் மாயம்

தினத்தந்தி
|
22 Nov 2022 5:07 PM GMT

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கு ஜாவா,

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இதனால், மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளில் இருந்து வெளியே ஓடி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். பலர் திறந்தவெளி பகுதிகளுக்கும் ஓடியுள்ளனர். ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது.

இந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்படி, இதுவரை மொத்தம் 268 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 151 பேர் மாயமாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். அவர்களில் பலர் பள்ளி குழந்தைகள் என தெரிய வந்து உள்ளது. நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்த்தாவின் தெற்கு பகுதி நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300-க்கும் கூடுதலான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்