< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
திடீர் மாரடைப்பு: பெண்ணின் உயிரை காத்த செல்லப்பிராணி
|18 Aug 2022 2:09 PM GMT
மாரடைப்பு ஏற்பட்ட பெண்ணிற்கு மார்பு மீது தட்டி கூச்சலிட்டு எழுப்பிய பூனையால் உயிர்பிழைத்துள்ளதாக கூறியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்தை சேர்ந்த சாம்பெல்ஸ்டெட் (வயது 42) என்ற பெண் செல்லபிராணியாக பூனையை வளர்த்து வருகிறார்.
இந்தநிலையில் அவருக்கு அதிகாலை தூக்கத்திலேயே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் அவரது மார்பு மீது தட்டி கூச்சலிட்டு எழுப்பிய பூனையால் சாம்பெல்ஸ்டெட் உயிர் பிழைத்துள்ளாதாக அவர் கூறியுள்ளார். சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் வந்தது நல்ல வேலை என்று மருத்துவர் கூறியதாக அவர் கூறினார்.