< Back
உலக செய்திகள்
பெட்ரோல் விலை அதிகரிப்பு: கழுதையில் பணிக்கு வர அனுமதி கோரிய விமான போக்குவரத்து ஊழியர்
உலக செய்திகள்

பெட்ரோல் விலை அதிகரிப்பு: கழுதையில் பணிக்கு வர அனுமதி கோரிய விமான போக்குவரத்து ஊழியர்

தினத்தந்தி
|
3 Jun 2022 8:46 PM GMT

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை அதிகரிப்பு காரணமாக, கழுதையில் பணிக்கு வர விமான போக்குவரத்து ஊழியர் அனுமதி கோரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும் உள்ளது. இதனால் மக்கள் கடும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் ஊழியர் ஒருவர், பெட்ரோல் விலை அதிகரித்து வருவதால் தான் இனி பணிக்கு வருவதற்கு கழுதையை பயன்படுத்த அனுமதிகோரி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு கடிதம் எழுதியது நகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள விமான நிலையத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அந்த ஊழியர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குனர் ராஜா ஆசிப் இக்பாலுக்கு எழுதிய கடிதத்தில், "பணவீக்கம் ஏழைகளின் முதுகை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தினரையும் உடைத்துவிட்டது. பெட்ரோல் விலை உயர்வால் தனி நபர் போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எனது கழுதை வண்டியை விமான நிலையத்துக்கு கொண்டு வர அனுமதிக்கவும்" என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்