< Back
உலக செய்திகள்
பிரான்சில் சிறுவர்களுக்கு கத்திக்குத்து - பலர் படுகாயம்
உலக செய்திகள்

பிரான்சில் சிறுவர்களுக்கு கத்திக்குத்து - பலர் படுகாயம்

தினத்தந்தி
|
8 Jun 2023 9:49 AM GMT

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸ்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பூங்காவில் சிறுவர்களை மர்மநபர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் நடத்திய இந்த தாக்குதலில் 6 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

சிறுவர்களை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 6 சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி தகவல் அளித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்