< Back
உலக செய்திகள்
2 நாள் பயணமாக சுவீடன் சென்ற இந்திய கடற்படை கப்பல்
உலக செய்திகள்

2 நாள் பயணமாக சுவீடன் சென்ற இந்திய கடற்படை கப்பல்

தினத்தந்தி
|
15 Aug 2024 3:24 PM GMT

இந்திய கடற்படை கப்பல் ‘ஐ.என்.எஸ்.தபார்’ 2 நாள் பயணமாக சுவீடன் சென்றுள்ளது.

ஸ்டாக்ஹோம்,

இந்தியாவும், சுவீடனும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன. இதன் அடிப்படையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ்.தபார்' போர்க்கப்பல் 2 நாள் பயணமாக சுவீடன் சென்றுள்ளது.

சுவீடனின் கோதன்பர்க் நகருக்கு 'ஐ.என்.எஸ்.தபார்' போர்க்கப்பல் சென்றடைந்தது. கப்பலில் இருந்த இந்திய கடற்படையினர் கோதன்பர்க் நகரில் இந்தியாவின் 78-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடினர்.

இந்த பயணத்தின்போது இந்திய கடற்படையினர், சுவீடன் கடற்படையினரோடு இருதரப்பு தொழில்முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்த பயணமானது, இந்தியா-சுவீடன் இடையிலான கடல்சார் உறவை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்