< Back
உலக செய்திகள்
ஈராக்கில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 9 பேர் பலி
உலக செய்திகள்

ஈராக்கில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 9 பேர் பலி

தினத்தந்தி
|
19 Dec 2022 7:42 PM GMT

ஈராக்கில் போலீஸ் வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள கிர்குக் நகரில் போலீசார் சிலர் கவச வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள சலால் அல் மாதர் கிராமம் அருகே சென்றபோது போலீஸ் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

வாகனத்தின் மீது குண்டுகளை வீசி எறிந்தும், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த கொடூர தாக்குதலில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பாக்தாத்தில் சாலையோரம் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்